AD

இரு மொழிகளில் சாய்பல்லவி

பிரேமம்  படத்துக்குப் பின்னர் தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற சாய் பல்லவி, தமிழ், தெலுங்கிலும் முன்னணி நடிகையாகி விட்டார். 

தமிழில் தனுசுடன் நடித்த மாரி-2 படம் மூலம் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவியின் நடனத்திற்காகவே ரவுடி பேபி பாடல் பல மில்லியன்களை கடந்து ரீச் ஆகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்,  மலையாளத்தில் தற்போது பஹத்பாசிலுடன் அதிரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். 

மர்மம் கலந்த திரில்லர் கதையில் உருவாகும் இந்தபடம் மலையாளத்தில் உருவானபோதும், தமிழ், தெலுங்கு ரசிகர்களை கருத்தில் கொண்டும், சில பல மாற்றங்களுடன் உருவாகி வருகிறது. 

மலையாளத்தில் வெளியாகும் அதேநாளில், அதிரன் படத்தை தமிழ், தெலுங்கிலும் வெளியிடுகிறார்கள். செஞ்சுரி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை விவேக் இயக்கி வருகிறார்.



#tamilcinemaking, #Sai_Pallavi, #rowdy_baby, #Bhagat_Basil