AD

ராதாரவியை நேராக சென்று அறைந்துவிடுவேன்-ஸ்ரீரெட்டி!!

நடிகை நயன்தாரா - நடிகர் ராதாரவி விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக திரையுலகம் மட்டுமின்றி அரசியல் உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது சர்ச்சைக்கு பெயர் போன நடிகை ஸ்ரீரெட்டியும் இதுகுறித்து தனது பங்கிற்கு கருத்து தெரிவித்துள்ளார். நயன்தாரா ஒரு கண்ணியமான பெண் என்றும் அதனால் அவர் இந்த விஷயத்தில் அமைதி காப்பதாகவும்,  ஆனால் நான் கொடூரமான பெண் என்றும் இந்த மாதிரியான வார்த்தைகளை கேட்டால் நேராக சென்று அறைந்துவிடுவேன் என்றும் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.


#Nayanthara #Issue #Ratharavi #Sri reddy