AD

அடங்கமறு இயக்குநரின் ஆவேசம்

பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் என்னை தொந்தரவு செய்கிறது கைதான குற்றவாளிகளை, அவர்களது பெற்றோர்களின் கண்முன்னே எரித்து விடுவேன். இவ்வாறு  கூறியுள்ளார். அடங்கமறு படத்தின் இயக்குநர் கார்த்திக் தங்கவேல். 

பொள்ளாச்சியில் பாலியல் சம்பவம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.  சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், அடங்கமறு படத்தின் இயக்குநர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் என்னை தொந்தரவு செய்கிறது. வாய்ப்பு கிடைத்தால், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளிகளை, அவர்களது பெற்றோர்களின் கண்முன்னே எரித்து விடுவேன். விசாரணை நடத்தி தாமதிக்க வேண்டாம், உடனே குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.