AD

மன்னிப்பு கேட்ட ராதாரவி

கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நயன்தாராவை மிக மோசமாக விமர்சித்தார். அதற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் இதற்கு ராதாரவி முதன் முறையாக தற்போது விளக்கம் கொடுத்துள்ளார், இதில் ‘நான் பேசியது உங்கள் மனதை புன்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், நான் பேசிய கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது, மேலும், என்னால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் கட்சியிலிருந்து விலகிக்கொள்கிறேன்’ என்றும் கூறியுள்ளார். அத்துடன் இவ்வாறு பேசியமைக்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.

#RadhaRavi #Nayanthara #KolaiyuthirKaalam #Vishal #Stalin #RadharaviPressMeet #ChakriToleti #Tamilcinemaking