AD

செல்ஃபி சர்ச்சையில் மாட்டி கொண்ட நடிகர் கார்த்தி!!

கே.சி.சுந்தரம் இயக்கத்தில் ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சதீஷ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள "ஜூலை காற்றில்" திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் நடிகர் கார்த்தி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் விழாவை தொகுத்து வழங்கிய நடிகை கஸ்தூரி, நடிகர் கார்த்தியை பேச அழைத்தார். அப்போது, கையில் செல்போனை வைத்து கார்த்தி இங்க வாங்களேன். நம்ம ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம் என்றார். உங்க அப்பா இல்ல.. அதனால அவசரமா ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம் என கஸ்தூரி நக்கலாக பேசினார்.

இதனால் கடும் கோபமடைந்த நடிகர் கார்த்தி, இது தேவையில்லாத ஒரு விஷயம் என முகத்தை திருப்பிக் கொண்டு பேச ஆரம்பித்தார். கார்த்தி பேசுகையில், ‘செல்ஃபி என்பதற்கே மரியாதை இல்லாமல் போய்விட்டது. கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்கறது ஒரு நாகரிகம் ஆனால், முகத்துக்கு முன்னால் கேமராவை கொண்டு வந்து  ஒரு ப்ளாஷ் பிறகு பின்னால் ஒரு ப்ளாஷ்  ஒரு விவஸ்தையே கிடையாது என்றார் நடிகர் கார்த்தி.

#Karthi #Kasthuri #Sivakumar #Selfie #Controversy #July Kaatril #Audio Launch