AD

இயக்குநர் தவறாக நடந்து கொள்ளவில்லை - - தமன்னா


   




பிரபல பாலிவுட் இயக்குநர் சஜித்கான் மீது இந்தி நடிகைகள் ‘மீ டூ’வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தன்னிடம் அவர் தவறாக நடந்து கொள்ளவில்லை என்று கூறினார்.


இந்தி நடிகைகள் ‘மீ டூ’வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். நடிகர் நானா படேகர் உள்ளிட்ட பலர் இதில் சிக்கினர். பிரபல இந்தி டைரக்டர் சஜித்கான் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சலோனி சோப்ராவும், ஒரு பெண் பத்திரிகையாளரும் புகார் கூறினார்கள்.

அவர் படத்தில் நடித்த வித்யா பாலன், பிபாஷா பாசு ஆகியோரும் அவர் மீது பாலியல் புகார் கூறினார்கள். இதைத்தொடர்ந்து அவர் இயக்கிய ஹவுஸ்புல்-4 படத்தில் நடிக்க மறுத்து அக்‌ஷய்குமார் விலகினார். இதனால் அந்த படத்தில் இருந்து சஜித்கானை நீக்கிவிட்டனர். சஜித்கான் இயக்கிய ஹிம்மத்வாலா, ஹம்ஷகல்ஸ் ஆகிய இரண்டு இந்தி படங்களில் தமன்னா நடித்து இருந்தார்.


படப்பிடிப்பின் போது சஜித்கான் தவறாக நடந்துகொண்டாரா? என்று தமன்னாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

“சஜித்கான் இயக்கத்தில் நான் நடித்த இந்தி படங்கள் சரியாக போகவில்லை. அந்த படங்களின் படப்பிடிப்புகள் நடந்தபோது சஜித்கான் எனக்கு எந்த தொந்தரவையும் தரவில்லை. 

என்னிடம் அவர் தவறாகவும் நடந்து கொள்ளவில்லை. சஜித்கானுடன் பணியாற்றியபோது சவுகரியமாகவே உணர்ந்தேன். மற்ற நடிகைகள் அவர் மீது பாலியல் புகார் கூறியிருப்பது பற்றி எனக்கு தெரியாது. 

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அனுபவங்கள் இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி எந்த சங்கடமும் ஏற்படவில்லை” என்று மேலும் அவர் தொிவித்துள்ளார்.

 #Tamannaah #SajidKhan