AD

ஆர்யா - சிம்புவை இயக்க ஆசைபடும் சந்தானம்!!

நடிகர் சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு 2' திரைப்படம் வரும் 7ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சந்தானம், இயக்குனர் ராம்பாலா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சந்தானம் பேசியதாவது:

நடிகராக இருப்பதை விட தயாரிப்பாராக இருப்பது தான் கஷ்டம். வருடத்திற்கு ஒரு படம் தான் நடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏற்கனவே 3 படங்கள் முடிந்த நிலையில் இருக்கிறது. ஆனால் வெளியாவதற்கு இன்னும் தாமதம் ஆகிறது. நான் இயக்குநரானால் ஆர்யாவை வைத்து  படம் எடுப்பதோடு மட்டும் இல்லாது சிம்புவிற்கென்று தனி  கதை எழுதி அதை நான்  இயக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. எந்த படம் எடுத்தாலும் நல்ல படமாக அமைய  வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.
இந்த படத்தின் இரண்டாவது பகுதி  கேரளாவை சுற்றியே  இருப்பதால் கேரளா பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஷ்ரதா சிவதாஸை நாயகியாக தேர்ந்தெடுத்தோம். ’மொட்டை’ ராஜேந்திரன்,  விஜய் டிவி ராமர், விபின், சிவசங்கர் மாஸ்டர், விஜய் டிவி தனசேகர், சி.எம்.கார்த்திக், ஊர்வசி, இயக்குநர் மாரிமுத்து, ஜெயப்ரகாஷ், பிரஷாந்த், இன்னும் பலரும் பணியாற்றியிருக்கிறார்கள்.

பேய் படத்திற்கு காட்சிகள் தான் மிகவும் முக்கியமான ஒன்று, அது சரியாக அமையவில்லை என்றால்  பொம்மை படம் போல இருக்கும். அதற்காக கேமராமேன் தீபக் கூடுதலாக உழைத்திருக்கிறார். இவ்வாறு சந்தானம் பேசியுள்ளார்.