AD

மீண்டும் களத்தில் கேப்டன் விஜயகாந்



தமிழ் திரையுலக நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். இந் நிலையில் தற்போது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிகிச்சைக்காக சென்ற  கேப்டன் விஜயகாந்த்  நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 16ஆம் தேதி சென்னை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை திரும்பும் கேப்டனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தேமுதிக தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தையை தேமுதிகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் நடத்தி வரும் நிலையில் விஜயகாந்த் சென்னை திரும்பியவுடன் கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றும் அவர் பழைய நிலைக்கு திரும்பி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவார் என ரசிகர்களும், தொண்டர்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.