AD

தனது திருமணத்தை ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்த ஆர்யா



கலர்ஸ் தொலைக்காட்சியில் ஆர்யாவிற்கு பெண் தேடும் நிகழ்ச்சி, எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி ஒன்று துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெரும் நபரை ஆர்யா திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று
அறிவித்திருந்தனர்.ஆனால் இறுதி வரை அந் நிகழ்ச்சியில் யாரையும் ஆர்யா திருமணம் செய்யவில்லை.

இந்நிலையில் ஆர்யா மற்றும் சயீஷா காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக ஆர்யா மற்றும் சயீஷாவின் திருமணம் பற்றிய அறிவிப்பு மற்றும் வெளியாகி பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்யா, எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் அபர்னத்தியை தான் திருமணம் செய்து கொள்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கபட்டது. அதே போல அபர்னதியும் மற்ற போட்டியார்களை விட ஆர்யா மீது பெரும் காதல் கொண்டிருந்தார்.


இந்நிலையில் ஆர்யா மற்றும் சயீஷா திருமணம் குறித்த செய்தி பற்றி அபர்ணதியிடம் கேட்கப்பட்ட போது, ஆர்யாவிடம் சயீஷா காதல் குறித்து  ஆர்யாவிடம் கேட்டேன் கூறிவிட்டார். அதெல்லாம் வதந்தி என்று கூறிவிட்டார். அதனால் ஆர்யா திருமணம் என்று வருவது எல்லாம் வதந்தி என்று தான் தோன்றுகிறது, அப்படி உண்மையாக இருந்தால் என்ன செய்வது வேறு வழியில்லை அவரை ஏற்றுக்கொண்டு செய்வது வேண்டியது தான்.
ஆனால், அவருக்கு கல்யாணம் ஆகப்போவது என்று நினைத்தால் எனக்கு மிகவும் வருத்தமாகத் தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.



இந்நிலையில் வரும் மார்ச் மாதம் 10ம் தேதி ஹைதராபாத்தில் அவர்களின் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. இருப்பினும் ஆர்யாவும், சயீஷாவும் அது குறித்து வாய் திறக்கவில்லை.

காதலர் தினமான இன்று தனது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஆர்யா. நடிகை சயீஷாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.நடிகை சயீஷாவை திருமணம் செய்வதை  இதன் மூலம் உறுதி செய்துள்ளார் ஆர்யா.