'வாலிபரை தன்னுடைய நண்பன் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்' - போட்டுடைத்த சின்மயி
பாடகி சின்மயி தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை மட்டுமல்லால் வெளியில் நடப்பதையும் தற்பொழுது பகிர்ந்து வருகின்றார். அந்த வகையில், வாலிபர் ஒருவர், அவருடைய பள்ளி பருவத்தில் தன்னுடன் படித்த நண்பன் ஒருவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவரத்தை கூறி ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லைகள் நடக்கிறது என கூறியுள்ளார்.
அந்த வாலிபர் குறித்து சின்மயி கூறுகையில், விளையாட்டாக ஆசிரியரை கிண்டல் செய்தவரை மிரட்டி தனக்காக பயன்படுத்தியுள்ளார் அவரது நண்பர். மற்ற விஷயத்திற்காக தொடங்கி கடைசியில் பாலியல் ரீதியில் வந்து முடிந்துள்ளது அந்த மிரட்டல். ஒருநாள் அந்த வாலிபரை அவரது நண்பர் தனது வீட்டிற்கு அழைத்து கற்பழித்துள்ளார்.
இதனை அந்த நபர் தனது தந்தையிடம் கூற அவர் அந்த நண்பனை ஓங்கி கன்னத்தில் அறைந்துள்ளார்.
Trigger warning.— Chinmayi Sripaada (@Chinmayi) February 22, 2019
I got this message from a boy being bullied and sexually abused by a classmate.
Men need to start talking. About abuse that happens to you from other men. pic.twitter.com/1kjsTC1bAD
Post a Comment