AD

சின்னத்திரை செம்பா-கார்த்திக்கின் கல்யாண செய்தி!!

வெள்ளித்திரையில் ஜொலிக்கும் நாயகிகளுக்கு ரசிகர்கள் இருப்பது போல சின்னத்திரை நாயகிகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில் மிகவும் பிரபலமான ‘ராஜா ராணி’ சீரியலில் நடிக்கும் ஆலியா மானசாவிற்கு தனியாக ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

அடிக்கடி டப்ஸ்மேஷ் வீடியோ வெளியிட்டு சமூக வலைத்தளங்களிலும் ஆலியா மானசா ரொம்ப ஃபேமஸ். இந்நிலையில், ராஜா ராணி சீரியலில் கணவன் மனைவியாக நடிக்கும் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் கசிந்து வந்தது, அதன் பிறகு மானசாவே காதலிப்பதாக ஒப்புக்கொண்டார்.



இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஜோடியாக பல டப்ஸ்மேஷ் வீடியோக்களை வெளியிட்டனர். ராஜா ராணி சீரியலின் செம்பா-கார்த்திக் ஜோடிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் உள்ளது. இதைத் தொடர்ந்து அவர்களது கல்யாணம் குறித்து கேள்விக்கு பதிலளித்த ஆலியா, இப்போதைக்கு கல்யாணம் செய்யும் முடிவில் இல்லை. நடிப்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும், அதன் பிறகுதான்  திருமணம் என்று தெரிவித்தார்.