AD

உதயநிதியின் "கண்ணை நம்பாதே"

நடிகர் உதயநிதி ஸ்டாலினின் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் சென்னையில் ஆரம்பமாக உள்ளது . இதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடத்தவும் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த படத்திற்கு "கண்ணை நம்பாதே" என்று  டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  உதயநிதிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த 'மீசையை முறுக்கு' படத்தின் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் நடிகர் சதீஷ் நடிக்கவுள்ளார்.

இந்த படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் என்பதும், சாம் சிஎஸ் இசையில், ஸ்ரீதர் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.