இந்திய விமானப் படையை வாழ்த்திய வைரமுத்து !
இந்திய விமானப்படையின் அதிரடி தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், மீண்டும் சின்மயி அவரை விமர்சித்து்ள்ளார்.
இந்த அதிரடி தாக்குதலுக்கு பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்த நிலையில் கவிஞர் வைரமுத்துவும் தனது வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார். “போர்மீது விருப்பமில்லை. ஆனால், தீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே! அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம்” என்று வைரமுத்து ட்வீட் செய்திருந்தார்.
போர்மீது விருப்பமில்லை.— வைரமுத்து (@vairamuthu) February 26, 2019
ஆனால், தீவிரவாதத்தின் மீது
தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே!
அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம்.#IndianArmyRocks #revengeforpulwama #IndianArmyOurPride
அவரது வாழ்த்தை பாடகி சின்மயி விமர்சித்துள்ளார். “இதற்கு முந்தைய ராணுவ நடவடிக்கை பற்றி அவர் (வைரமுத்து) எந்த பாராட்டும் தெரிவித்தது இல்லை. சுனாமி, புயல் போன்றவற்றுக்காக நிதியுதவி செய்தும் பார்த்தது இல்லை.
ராணுவம், பாஜகவை புகழ்ந்தால் ஆதரவு கிடைக்கும் என்று அவர் நினைக்கலாம்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையின் தாக்குதலுக்கு வைரமுத்து வாழ்த்து#SurgicalStrike2 #IndianAirForce #IndiaStrikesBackhttps://t.co/FD8klIARyv pic.twitter.com/YeZwAm6exV— News18 Tamil Nadu (@News18TamilNadu) February 26, 2019
Post a Comment