AD

இறந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கும் பிரபல பாலிவுட் நடிகர்


காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த  சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினருக்கு நடிகர்களும் பொதுமக்களும் தங்களால் முடிந்தளவு உதவி வழங்கி வருகின்றனர்.

மற்றும்  உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த சுப்ரமணியன், சிவசந்திரன் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதே சமயத்தில் நடிகர்களும் இறந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்.

இந் நிலையில்  பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன்  இறந்த ஒவ்வொரு மாவீரரின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் உதவி அளிப்பதாக கூறியுள்ளார். அதை எவ்வாறு கையளிப்பது என்பது தொடர்பான வழிமுறைகளை தற்போது அவர் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகின்றது.