AD

‘வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல்’ மீண்டும் இப்படி ஒரு கொடுமை செய்த பாலாஜி - நித்தியா போலீஸில் புகார்


கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடிகர் பாலாஜிக்கும், நித்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக இருவரும் ஏற்கனவே போலீசில் புகார் கொடுத்து இருந்தனர்.  நித்யா, சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கணவர் பாலாஜி மீது புகார் கொடுத்து இருந்தார்.

இதற்கிடையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகர் தாடி பாலாஜியும், நித்யாவும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி தன்னுடைய குடும்பத்துடன் இணைய முயற்சித்தார். நிகழ்ச்சி முடிந்து குடும்பத்துடன் அவர் இணைய வேண்டும் என்று மக்களே ஆசைப்பட்டார்கள். அவர்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் மீண்டும் தன் மனைவி நித்யா மற்றும் குழந்தையை கொடுமைப்படுத்திருக்கிறார் தாடி பாலாஜி.

இந்தநிலையில் நேற்று நித்யா, மாதவரம் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் தாடி பாலாஜி மீது மீண்டும் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘பாலாஜி மீண்டும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து கலாட்டா செய்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் 21ந்தேதி குடிபோதையில் வந்து வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்தார். செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார். ரவுடிகள் மற்றும் அவரின் நண்பர்களை
வீட்டிற்கு வரவழைத்து ஆபாச வார்த்தைகளில் என்னை திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.’ என்றும் புகார் கொடுத்திருந்தார்.

மேலும், ‘எங்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்றுவரும் நிலையில் குடிபோதையில் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நடிகர் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனவும் அந்த புகாரில் நித்யா
தெரிவித்து இருந்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், நித்யாவிடம் அதற்கான புகார் மனு ஏற்பு ரசீது வழங்கினர். இது தொடர்பாக போலீசார், நடிகர் தாடி பாலாஜியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர்.
அப்போது அவர், வெளியூரில் சினிமா படப்பிடிப்பில் இருப்பதாகவும், 2 நாட்களில் சென்னை வந்ததும், விசாரணைக்கு வருவதாகவும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.