AD

'உனக்கு வெட்கமே இல்லையா' - சமூக வலைதளத்தில் யாஷிகாவை வறுத்தெடுத்த பெண்


பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார் நடிகை யாஷிகா ஆனந்த்.  தற்பொழுது மகத்துடன் ஒரு படம், ஆரவ்வுடன் ராஜபீமா மற்றும் சில படங்கள் என பிஸியாக நடித்து வருகின்றார்.

இதற்கிடையே தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதை அவ்வப்போது உறுதி செய்துகொள்கிறார். அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்களும் தங்கள் கமெண்டுகளை உடனுக்குடன் பதிவிட்டு வருகின்றனர்.

 பல சமயங்களில் யாஷிகா தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அது போல் சமீபத்தில் படுகவர்ச்சியான போட்டோ ஒன்றை வெளியிட்டு, "உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்" என யாஷிகா பதிவிட்டிருந்தார்.


ஆனால் அவர் நினைத்தது போல் இல்லாமல், இந்த போட்டோவை வைத்து  ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்துவிட்டனர். பலரும்  கடும் விமர்சனங்களை பொழிந்துவிட்டனர். அதில் ஒரு பெண் யாஷிகாவை மிகக்கடுமையாக சாடியுள்ளார். 'உனக்கு வெட்கமே இல்லையா' என யாஷிகாவை அவர் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள யாஷிகா, "பிரச்சினை எனது உடலில் இல்லை. உங்கள் கண்களில் தான் இருக்கின்றது. உனது விருப்பப்படி நீ பார்க்கலாம். அமைதியாக இரு", என பதிவிட்டுள்ளார்.

மற்றும் ஒருவர் "நீ எந்தளவுக்கு உன் உடம்பை காட்டுறியோ, அந்தளவுக்கு நீ வாய்ப்புகளை இழப்பாய். காமெடியன்களுடன் தான் ஜோடி சேர்ப்பார்கள். பிறகு நைட் பார்ட்டி, மது என காலம் கழிக்கலாம். சில ஆண்டுகள் கழித்து
இதை நீ உணர்வாய்", என கூறியுள்ளார்.

ஒரு சிலர் யாஷிகாவிற்கு ஆதரவாக கமெண்ட் செய்துள்ளனர். மற்ற சிலர் அடுத்த சன்னிலியோன் யாஷிகா தான் எனவும் வர்ணித்துள்ளனர்.