AD

ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்த சிம்பு!!!

இயக்கினர் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், மகத், கேத்தரீன் தெரசா, ரோபோ சங்கர், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இந்த படத்தின் வெளியீட்டின் போது கட்அவுட், பேனர் எல்லாம் வைக்காதீர்கள். அந்தப் பணத்தில் உங்களுடைய குடும்பத்தினருக்கு உடைகள், இனிப்புகள் வாங்கிக் கொடுங்கள். என்று சிம்பு தனது ரசிகர்களுக்கு வீடியோவில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வீடியோ பதிவைக் குறிப்பிட்டு சமூகவலைதளங்களில் பலரும் கிண்டல் செய்ய தொடங்கினார்கள். ‘இருப்பதே சில ரசிகர்கள் தான்’,  என்று குறிப்பிட்டனர். இதற்கு பதிலடியாக சிம்பு புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். சிம்பு பேனர் வைக்க வேண்டாம், பால் ஊற்ற வேண்டாம் என்று சொல்லியும் ரசிகர்கள் கேட்கவில்லை. சிம்பு படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் பெரிய பெரிய கட் அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன. அவைகளுக்கு பால் ஊற்றினார்கள் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் சில தியேட்டர்களில் அதிகாலை 5 மணிக்கு காட்சிகள் திரையிடப்பட்டது. கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டருக்கு வந்த சிம்பு ரசிகர்களுடன் படம் பார்த்து மகிழ்ந்தார். அவருடன் மகத், ரோபோ சங்கர் உடன் இருந்தனர்.