AD

வெறித்தனமாக இருக்கு என்று சூர்யாவிடம் கார்த்தி சொல்ல காரணம் ?


தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் நடிகர் சூர்யாவும் ஒருவர். இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைக்கும். இவரின் கியூட்டான நடிகர் என்பதால் தான் இவருக்கு அவ்வளவு ரசிகர்களும் இருக்கிறார்கள்.
இவரின் நடிப்பில் தற்போது வெளியாக இருப்பது NGK படம் தான்.

இந்த படத்தில் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்கள். இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கு. டீசரும் வரும் 14 ஆம் தேதி தான் வெளியாகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு அன்று மாலை 6 மணிக்கு மேல் டீசர் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்தது.

ஆனால் சூர்யாவின் தம்பி கார்த்தி தற்போது டீஸர் குறித்து ஒரு சுவரசியாக தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் இப்படத்தின் டீஸரை பார்த்துவிட்டாராம். டீஸர் வேற லெவெலில் உள்ளதாம். இந்த படத்தில் இரு கதாநாயகிகளின் கதாபாத்திரமும் சற்று வித்யாசமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும் அவரது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் டீஸரை நான் பார்த்துவிட்டேன், வெறித்தனமா இருக்கு என்று ட்வீட் செய்துள்ளார். இதை கேட்ட சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.