AD

நடிகை அஞ்சலியுடன் காதலா மனம் திறக்கும் ஜெய்!!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பகவதி என்ற படத்தில் அவருக்கு தம்பியாக அறிமுகமானவர் நடிகர் ஜெய். அதையடுத்து ‘சென்னை 28’ என்ற படத்தில் நடித்தார். பின்னர் ‘சுப்ரமணியபுரம்’, ‘சரோஜா’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ஜருகண்டி’, ‘ராஜாராணி’ உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் ஜெய்க்கு அஞ்சலி ஜோடியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும்,  இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்த காதல் சீக்கிரமே முறிந்து போனதாக பேசப்படுகிறது.

தன்னுடைய காதல் பற்றி ஜெய் கூறுகையில், “அஞ்சலியுடன் நான் நெருங்கி பழகியது உண்மைதான். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. இருவரும் காதலர்களாக பழகவில்லை.

நயன்தாராதான் எனக்கு தமிழில் பிடித்த நடிகை 2013-ல் நாங்கள் இருவரும் இணைந்து நடித்த படம் ‘ராஜா ராணி’. இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது எங்கள் இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அது இப்போதும் தொடர்கிறது. தொடர்ந்து அவருடன் பல படங்களில் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். விரைவில் என்னுடைய திருமணம் நடக்கும். முக்கியமாக அது காதல் திருமணமாகத்தான் இருக்கும்’’ என்றார் ஜெய்.