AD

என்னை விட்டால் நான் ஆர்யாவுக்கு அடித்துவிடுவேன் !


நடிகர் ஆர்யாவை முன்வைத்து எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள விரும்பும் போட்டியில் 16 பெண்கள் பங்குபற்றியிருந்தனர்.

இறுதியில் 3 பெண்களை தெரிவு செய்தார். அதில் இருந்து யாரையாவது வாழ்க்கை துணையாக தேர்வு செய்வார் என்று பார்த்தால் தற்சமயம் நடிகை சயீஷாவை வாழ்க்கை துணையாக முடிவு செய்துள்ளார். அதனை பற்றி
அவருடைய ட்விட்டர் பக்கத்திலும் உறுதி செய்திருந்தார்.

ஆர்யாவின் திருமணம் குறித்து ஒரு பேட்டியில் எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர் குஹாசினி பேசும்போது, ’இலங்கை பெண் சுசானாவை ஆர்யா ஏமாற்றிவிட்டார்.அவருக்கு தமிழ் வராது, என்னுடன் அவர் நெருக்கமாக பழகினார். அவருடைய குழந்தையை எல்லாம் கூட்டிவந்து பேசிவிட்டு சயீஷாவை திருமணம் செய்கிறேன் என்று சொன்னது கோபமாக வந்தது, என்னை விட்டால் நான் அடித்துவிடுவேன’ என்று பேசியுள்ளார்.