AD

சர்ச்சையான பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் நடந்த கனா படத்தின் வெற்றி விழாவில் சர்ச்சையாக பேசினார். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு கடைசியாக, 'சில படங்கள் ஹிட் ஆகுதோ இல்லையோ வெற்றி விழா கொண்டாடிவிடுவார்கள்' என ஒரு வரி கூறினார்.

இப்படி அவர் மற்ற படங்களை கேவலமாக விமர்சித்தது சர்ச்சையானது. இதற்கு தற்போது அவர் ட்விட்டரில் மன்னிப்பு கோரியுள்ளார்.

'அது funனாக பேசியது. எந்த படத்தையும் குறிப்பிட்டு சொன்னதல்ல. யாரையும் நான் காயப்படுத்த விரும்பவில்லை. அனைத்து படங்களும் வெற்றி பெற வேண்டும் என்று தான் நான் விரும்புவேன். படம் எடுத்து வெற்றிபெற வைப்பது எவ்வளவு கடினம் என தெரியும். யாராவது என் பேச்சால் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.