AD

தந்தையின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் பிரபலம்

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியினால் ‘கலையரசி’ என்று பட்டம் சூட்டப்பட்ட நடிகை ராதிகா சரத்குமார்  43 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார்.  இதுவரை  5 மொழிகளில் 375 படங்களில் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் இவருடைய 375-வது படம்  மணிரத்னத்தின் இயக்கத்தில் வானம் கொட்டட்டும் என்ற தலைப்பில் உருவாகிவருகிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் திரையிடப்பட இருக்கும் நிலையில்  ராதிகா  தனது தந்தையான எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.