AD

பிக்பாஸ் வீட்டில் வெடித்த புதிய போர்

தற்போது பிக்பாஸ் மூன்றாவது சீசன் நடந்துவருகிறது. அதில் துவக்கம் முதலே வனிதா, அபிராமி, சாக்ஷி, ஷெரின் போன்றவர்கள் ஒரு கேங்காக நெருக்கமாக இருந்தனர். வில்லி கேங் என பிக்பாஸ் பார்க்கும் ரசிகர்கள் விமர்சிக்கும் அளவுக்கு மோசமான செயல்கள் அவர்கள் செய்துவந்தனர்.
இந்நிலையில் தற்போது அபிராமி மற்றும் வனிதா இடையே சண்டை வெடித்துள்ளது. தற்போது வெளிவந்துள்ள புதிய டீசரில் அவர்களுக்கு நடுவில் வாக்குவாதம் நடந்துள்ளது.
அதன் பிறகு ஆபிராம் பாத்ரூமுக்கு சென்று கேமரா முன்பு கதறி அழுகிறார். 'என்னை விட்டுடுங்க ப்ளீஸ், வெளியே போகிறேன்' என ஆபிராமி கதறி அழுகிறார்.