அல்லாவுக்காய் விலகிச் சென்ற நடிகை
மத நம்பிக்கை காரணமாக பாலிவுட் திரையுலகை விட்டு விலகுவதாகத் தெரிவித்துள்ளார் பிரபல நடிகை ஜாயிரா வாசிம்
அமீர்கானின் மகளாக டங்கல் படத்தில் நடித்த ஜாயிரா வாசிம் திரையுலகில் நடித்ததனால் தமக்கும் அல்லாவுக்குமான இடைவெளி அதிகரித்ததாகவும் தாம் அறியாமையின் பாதையில் சென்று விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாலிவுட்டில் எல்லோரும் தன்மீது அன்பையே பொழிந்த போதும் தாம் தமது திரைப்பட வாய்ப்புகள் குறித்து மகிழ்ச்சியடையவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு கிடைத்த அடையாளம் மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என்று தெரிவிக்கும் அவர் மதரீதியாக அல்லாவுக்கு உண்மையாக இருப்பதற்காக திரைப்படத்துறையை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
#ZairaWasim #cinesamugam
Post a Comment