AD

பிரேக்அப் ஆகிடுச்சு ஹாப்பியா இருக்கேன் - ஆயிஷா..!!!

ஆயிஷா `பொன்மகள் வந்தாள்' சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவர் இயக்குநருடன் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக அதிலிருந்து விலகினார். இந்த சீரியல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதன் பிறகு  `ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் `சத்யா'. இந்த சீரியலில் டாம் பாய் கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஆயிஷா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இவருடைய டிக் டாக் வீடியோ குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த சீரியலின் கதாநாயகன் விஷ்ணு. இவர்கள் இருவரும் இருக்கக்கூடிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வந்தது.
விஷ்ணு, ஆயிஷா இருவரும் சமீபத்தில் ஒரு இணைய தளத்தில் பேட்டி கொடுத்திருந்தார்கள் அதில் அவர்கள் கூறியது :- `சத்யா' சீரியல் சூப்பரா போய்ட்டு இருக்கு. எங்களுக்குப் பெரும்பாலும் தெருக்களில்தான் ஷூட்டிங் இருக்கும். நிறைய பெற்றோர்கள் எங்ககிட்ட வந்து சத்யா சீரியலை என் பசங்க பார்க்குறாங்கன்னு சொல்றப்போ ரொம்பவே சந்தோஷமா இருக்கு. குழந்தைங்க எங்களுடைய சீரியலை விரும்புறாங்கங்குறதே பெரிய விஷயம். அதனால எங்களுடைய `சத்யா' டீமே ஹாப்பி!" என்ற விஷ்ணு சொல்லியிருந்தார்.

அவரை தொடர்ந்து ஆயிஷா கூறியது :- ``தெலுங்கில் ஒரு சீரியலில் நடிக்கிறேன். இந்த ஷூட்டிங் முடிஞ்சதும் அங்கே போயிடுவேன். இரண்டு சீரியலிலும் பிஸியா ஓடிட்டு இருக்கேன். என்னுடைய இரண்டு ஹீரோக்களும் எனக்கு நல்ல நண்பர்கள். செட்ல செம ஜாலியா நடிச்சிட்டு இருப்போம்" என்றவரிடம் சர்ச்சையான புகைப்படம் குறித்துக் கேட்டதும் சிரிக்கிறார்.
ஷூட்ல நடிச்சிட்டு இருக்கும் போது சும்மா ஜாலிக்காக போட்டோஸ் எடுப்பது இவர் வழக்கம், அப்படித்தான் அந்த போட்டோவையும் எடுத்துள்ளர். ஒரே மாதிரி போஸ் கொடுக்கிறது நல்லா இருக்காது.. சும்மா வித்தியாசமா போஸ் கொடுக்கலாமேன்னுதான் அப்படி போஸ் கொடுத்து போட்டோ எடுத்துள்ளார்கள். இப்போ நான் யாரையும் காதலிக்கவில்லை, "ஐ அம் சிங்கிள்" என்றவரிடம் உங்களுக்கு பிரேக்அப் ஆகிடுச்சான்னு நிருபர் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில்:-

சில விஷயங்கள் நம்மளுடைய வாழ்க்கைக்கு நல்லது இல்லைன்னு தோணுச்சுன்னா அதை விட்டுட்டு போகிறதுதான் சரி. அது எனக்கு செட்டாகாதுன்னு தோணுச்சு.. அதனால விலகிட்டேன்! இப்போ சிங்கிளா, ஹாப்பியா இருக்கேன்"  என்கிறார் ஆயிஷா.
#ayesha #tamilcinemaking #controversy #television #serial