AD

மாநாடு பாடலால் வந்த சிக்கல்

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்த சிம்பு,  தற்போது வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்கிறார். 

இப் படத்தின் படப்பிடிப்பு  ஆரம்பிக்கவுள்ள நிலையில், நேற்று, உனக்கு நா வேணான்டி..." என்று தொடங்கும் ஒரு பாடல் சமூகவலைதளங்களில் வெளியானது. 

மாநாடு படத்தின் பாடல் என்று குறிப்பிடப்பட்டிருந்ததோடு அதை சிம்பு பாடியதை போலவே இருந்தது.

இந்த செய்தி மாநாடு படக்குழுவை அதிர வைத்துள்ளது. அதையடுத்து அவர்கள் படத்தின் இசைமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவிடம்  இதுதொடர்பில், கேட்டுள்ளனர். 

"மாநாடு படத்திற்கான இசை பணியையே இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதற்குள் எப்படி பாடல் வெளியாகும்" என்று சொன்னபிறகே மாநாடு படக்குழுவினர் நிம்மதி பெருமூச்சு விட்டனராம்-என்றார் யுவன்சங்கர்.



#Yuvan_Shankar_Raja  #Silambarasan #tamilcinimaking