AD

Me Too பிளாக்மெயில் காட்சியா?- வாணி ராணி


‘வாணி ராணி’ சீரியலில் ‘மீ டூ’ இயக்கத்தை தவறாக சித்தரித்திருப்பதாக பாடகி சின்மயி நடிகை ராதிகாவிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பாக அவரது ட்வீட்டில், ‘திரைத்துறையில் வெற்றிபெற நீங்கள் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறீர்கள். ஒரு பெண்ணாக, அதிகாரம் படைத்த ஆண்கள் எப்படி பெண்களைக் கொடுமைப்படுத்தி பாடாய் படுத்துவார்கள் என்பது உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஆனால், ஏன் ‘வாணி ராணி’ தொடரில் ‘மீ டூ’ இயக்கத்தை பிளாக்மெயில் செய்வதற்காக பயன்படுத்தினீர்கள்?’என்று கேள்வி எழுப்பியதுடன்அந்த எபிசோடின் யூடியூப் லிங்கையும் பகிர்ந்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ராதிகா, ‘நீண்ட நாட்களாக திரைத்துறையில் இருக்கிறேன். அனைவரின் உரிமைக்காகவும் குரல் கொடுத்திருக்கிறேன். அதிலும் பெண்ணுரிமைக்கு தவறாமல் முன் நிற்பேன். இது திரைத்துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும். நீங்கள் சொன்ன தொடரின் கதையில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், என்னை அலுவலகத்தில் வந்து சந்தியுங்கள்’ எனவும்  கூறியுள்ளார்.

#chinmayisripada #chinmayi #Metoo #tamilcinemaking