AD

படப்பிடிப்பில் விபத்து ; இருவர் சாவு

வரலட்சுமி சரத்குமாரின் படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வி.சமுத்ரா இயக்கத்தில், ரணம் என்றொரு கன்னட படத்தில் நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார்,

இப் படத்தின் சண்டைக்காட்சி பெங்களூருக்கு அருகிலுள்ள பாகலூரில் படமாக்கப்பட்டது. இரு கார்கள் மோதி தீப்பிடிப்பது போன்று காட்சியமைக்கப்பட்டது. 

இதேவைளை அருகில் வைத்திருந்த கேஸ் சிலிண்டரில் தீப்பற்றி அது வெடித்துச் சிதறியது. அதனால் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த இருவர் சம்பவ இடத்திலேயே சாவடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஐந்து வயது சிறுமியும், அவரது அம்மாவுமே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 
வருகின்றனர். 

குறித்த பகுதியில் படப்பிடிப்பு நடத்த பொலிஸாரிடம்  முன் அனுமதி பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




#Ranam, #accident, #Varalaxmi_Sarathkumar, tamilcinemaking