AD

ராதா ரவிக்கு கிடைத்த தண்டனைகள்

கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் நயன்தாராவை கேவலமாக விமர்சித்திருந்தார். 

தனது காதலியை விமர்சித்த ராதாரவி மீது  கோபத்தில் விக்னேஷ் சிவன் தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,


2018ம் ஆண்டு நடிகை ஒருவர் ராதாரவி மீது பாலியல் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை காரணம் பாலியல் புகார் கொடுத்த பெண் தான் யார் என்பதை தெரிவிக்க அவர் பயந்தார். ராதாரவி எந்த பிரச்சனையும் இல்லாமல் தப்பித்துவிட்டார்.
2017ம் ஆண்டு மிஸ்டர் ராதாரவி குறைபாடு உள்ள குழந்தைகளை விமர்சித்தார். ராதாரவி போன்ற ஆண்களால் தான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தொடர்கிறது.
அத்துடன்  ஸ்டாலின் சார், கனிமொழி மேடம் ஆகிய இருவரும் பொள்ளாச்சி சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்கள். தயவு செய்து ஆணாதிக்கவாதியான மிஸ்டர் ராதாரவி மீது நடவடிக்கை எடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார் விக்னேஷ் சிவன்.
அத்துடன் ராதாரவியை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
#RadhaRavi #Nayanthara #KolaiyuthirKaalam #Vishal #Stalin #RadharaviPressMeet #ChakriToleti #Tamilcinemaking