AD

விஜய்யைப் பார்க்கப் போனதால் வந்த வினை

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 63வது படத்தின் படப்பிடிப்பு சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் வார்ப்பு பகுதியில்  நடைபெற்று வருகிறது.

இந்த தகவல்கள் அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் பரவ நூற்றுக்கணக்கான ரசிகர்கள் விஜய்யைக் காணும் நோக்கில் அங்கு குவிந்தனர்.

நேற்று முன்தினம் மாலையில் இருந்தே ரசிகர்கள் அங்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் படப்பிடிப்பில் பிசியாக இருந்த விஜய் அவர்களை சந்திக்கவில்லையாம். இதையடுத்து ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்ததால் அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு நிலை ஏற்பட்டது. 

இதையடுத்து துறைமுகம் காவல் நிலைய பொலிஸார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறினார்கள்.  ரசிகர்களோ விஜய்யை பார்க்காமல் இங்கிருந்து செல்லமாட்டோம் என்று  கூச்சலிட்டனர். இதையடுத்து  தடியடி நடத்தி ரசிகர்களை அப்புறப்படுத்தினர்.

இதனால் நீண்டநேரமாக காத்துக்கிடந்த ரசிகர்கள், விஜய்யை பார்க்க முடியாமல் பொலிஸாரிடம்  அடிவாங்கித் திரும்பிச் சென்றனர்.























#adli, #Vijay, #Chennai, #police