AD

ஜோதிகாவின் ராட்சசி

ஜோதிகா தனது அடுத்த ரவுண்டை ஆரம்பித்திருக்கிறார். 36 வயதினிலே, மகளிர் மட்டும், காற்றின்மொழி, நாச்சியார் என கதாநாயகியை மட்டுமே மையமாகக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார் ஜோதிகா . 

அடுத்து எஸ்.ராஜ்  இயக்கும் படத்தில், ஜோதிகா பள்ளி ஆசிரியையாக நடிக்கிறார். இவருடன்  பூர்ணிமா, சத்யன், ஹரிஷ் பெரடி, கவிதா பாரதி உள்பட பலர் நடிக்கிறார்கள். 

இதற்காக 50 லட்சம் ரூபாய் செலவில் பள்ளி ஷெட் போட்டு பெரும்பாலான படப்பிடிப்புகள் அங்கு நடந்தது. தற்போது படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. 

பகலில் சாதுவான பள்ளி ஆசிரியையாகவும், இரவில் இன்னொரு முகமாவும் இருக்கிற கதை என்கிறார்கள். 

தற்போது படத்திற்கு ராட்சஷி என்ற டைட்டில் வைக்க முடிவு செய்திருப்பதாக தயாரிப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கிறது. இதுபற்றிய முறையான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.