போராட்டக் கதையில் அப்பா-மகன்
பாகுபலி படத்தைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கி வரும் 'ஆர்ஆர்ஆர்' படம் சுதந்திரப் போராட்டக் கதை என்று நேற்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது 1920 களில் நடக்கும் கதை என்று அறிவித்துள்ளார்கள். இந்தப் படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, அஜய்தேவகன், ஆலியா பட், இங்கிலாந்து நடிகை டெய்சி, சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ராம்சரணின் அப்பா சிரஞ்சீவியும் சுதந்திரப் போராட்டக் கதை கொண்ட படமான 'சைரா' படத்தில்தான் தற்போது நடித்து வருகிறார். இக்கதை 1800 களில் நடக்கும் கதையாகும்.
அப்பாவும் மகனும் ஒரே சமயத்தில் சுதந்திரப் போராட்டக் கதைகளில் நடித்து வருகிறார்கள். இதில் 'சைரா' படம் இந்த ஆண்டு அக்டோபரிலும், 'ஆர்ஆர்ஆர்' 2020 ஜுலையிலும் வெளிவரவிருக்கிறது.
இரண்டு படங்களுமே தெலுங்கத் திரையுலகில் அடுத்த எதிர்பார்ப்புள்ள படங்களாக அமைந்துள்ளன.
இது 1920 களில் நடக்கும் கதை என்று அறிவித்துள்ளார்கள். இந்தப் படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, அஜய்தேவகன், ஆலியா பட், இங்கிலாந்து நடிகை டெய்சி, சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ராம்சரணின் அப்பா சிரஞ்சீவியும் சுதந்திரப் போராட்டக் கதை கொண்ட படமான 'சைரா' படத்தில்தான் தற்போது நடித்து வருகிறார். இக்கதை 1800 களில் நடக்கும் கதையாகும்.
அப்பாவும் மகனும் ஒரே சமயத்தில் சுதந்திரப் போராட்டக் கதைகளில் நடித்து வருகிறார்கள். இதில் 'சைரா' படம் இந்த ஆண்டு அக்டோபரிலும், 'ஆர்ஆர்ஆர்' 2020 ஜுலையிலும் வெளிவரவிருக்கிறது.
இரண்டு படங்களுமே தெலுங்கத் திரையுலகில் அடுத்த எதிர்பார்ப்புள்ள படங்களாக அமைந்துள்ளன.
#chiranjeevi, #ram_charan, #saira_narasimha_reddy
Post a Comment