AD

ஜெயா வாழ்க்கை திரைப்படமாகிறது!















தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதை திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகிறது.

புரட்சித்தலைவி என ஜெயலலிதா அழைக்கப்பட்டதால், தமிழில் தலைவி என்றும், ஹிந்தியில் ஜெயாஎன்ற பெயரிலும் இத்திரைப்படம் தயாராகிறது. 

இப்படத்தை மதராசப்பட்டினம், தலைவா, தெய்வத் திருமகள் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் விஜய், இருமொழிகளிலும் இயக்குகிறார்.

இதுகுறித்து கதாநாயகியாக நடிக்கும் கங்கனா ரனாவத் கூறியதாவது: 

ஜெயலலிதா இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பெண் சாதனாயாளர். அரசியல் வாழ்விலும், அதற்கு முன்பு அவர் ஈடுபட்டிருந்த திரைத்துறையிலும் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு இரு துறையிலும் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர். 

அவரது கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பெரும் மரியாதையாக கருதுகிறேன் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து இயக்குநர் விஜய் கூறியதாவது: 
நாட்டின் புகழ்வாய்ந்த தலைவர்களில் ஜெயலலிதாவுக்கு முக்கிய இடமுண்டு. அவரைப்பற்றி திரைப்படம் இயக்குவது என்பது என் வாழ்வில் கிடைத்த பெரும் அங்கீகாரமாகவும், பொறுப்பு மிக்கதாகவும் கருதுகிறேன். இத்திரைப்படத்தை மிகுந்த கவனத்துடனும், நேர்மையுடனும் எடுத்து முடிப்பேன் என்று தெரிவித்தார்.

இத்திரைப்படத்தின் கதையை பாகுபலிமணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும், இயக்குநர் ராஜமவுலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர்.



#Jeya #TamilCinemaKing #Politics