AD

நடிகர் அரவிந்தசாமியுடன் நடித்ததில் மகிழ்ச்சி - நடிகை ரெஜினா!!

நடிகர் அரவிந்த்சாமி "சதுரங்க வேட்டை - 2", "நரகாசூரன்’", "வணங்காமுடி" ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘கள்ளபார்ட்’ என்ற  படத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார் . சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜபாண்டி இயக்கி வரும் இப்படத்தில் நடிகை ரெஜினா நாயகியாக நடித்து வருகிறார்.


இதில் அரவிந்த்சாமி ஹார்ட்வேர் என்ஜினீயராகவும், ரெஜினா நடன ஆசிரியையாகவும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதில் பார்த்தி என்ற புதுமுக நடிகரை வில்லனாக அறிமுகப்படுத்துகிறார்கள். தனது வேடம் பற்றி ரெஜினா கூறும்போது ‘இது எனக்கு மிகவும் பிடித்த வேடம். எனது வேடத்துக்கு படத்தின் கதையில் நிறைய முக்கியத்துவம் உள்ளது. அரவிந்தசாமியுடன் நடித்ததில் மகிழ்ச்சி’ என்று கூறியுள்ளார். இதுவரை 75 வீதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும். ஏப்ரல் மாதம் இப்படத்தை வெளியிடுவதாகுவும் படக்குழு முடிவு செய்துள்ளது.