AD

நண்பராக பழகி பின்னர் நடிகைக்கு காரில் பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனர்

சினிமா துறையில் பாலியல் தொல்லை பற்றிய குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மீ டூ புகார் அதிக அளவில் வந்து சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் அது தற்போது தான் ஓய்ந்துள்ளது.

இந்நிலையில் Bidita Bag என்ற நடிகை தற்போது பிரபல இயக்குனர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு உதவியாளராக இருந்த இயக்குனர் ஒருவர் முதலில் தன் படத்தில் நடிக்க ஹீரோயின் வேண்டும் என கூறி அணுகினாராம். பிரபல இயக்குனரின் உதவியாளர் என்பதால் அவருடன் நட்பாக பழகினாராம் Bidita Bag.

ஆனால் ஒருநாள் பார்ட்டி முடிந்து வீடு திரும்பும் வழியில் காரில் நடிகையிடம் தவறாக நடக்கமுயற்சித்துள்ளார் அந்த இயக்குனர். "என்னை விட்டுவிடு" என நடிகை கெஞ்சியபோது, "லூசா விடு, என்ஜாய் பண்ணலாம் வா" என கூறினாராம்.

"என்னை அவர் ரேப் செய்யவில்லை என்றாலும், ஒரு நண்பர் என கூறிக்கொண்டு எப்படி பாலியல் தொல்லை கொடுக்க முடியும்" என அவர் சோகமாக கூறியுள்ளார்.