AD

இயக்குனர் பாலா - வர்மா படத்திலுருந்து விலகுவது நான் சுயமாகவே எடுத்த முடிவு!!

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிப்பதாகவும், இயக்குநர் பாலா "வர்மா" படத்தை  இயக்குவதாகவும் அறிவிப்புகள் வெளியாகின. விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இந்த படத்தின் டிரெய்லர் கடந்த மாதம் வெளியாகி உள்ளது. இந்த மாதம் இந்த படம் வெளியாகும் எனவும்  அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் தயாரித்த "வி4 எண்டர்டெயின்மென்ட்" சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில்  இந்த படத்தின் இறுதி வடிவத்தை பார்த்தபோது தங்களுக்கு பிடிக்கவில்லை, அதனால் "இயக்குநர்" உள்ளிட்ட படக்குழுவினர் மாற்றப்பட்டு மீண்டும் படப்பிடிப்புகள் நடைபெறும் என அறிவித்ததோடு மட்டும் இல்லாமல்,  இந்த படம் வருகிற ஜூன் மாதம் வெளியாகும் எனவும் அறிவித்தார்கள்.

இந்த தகவல் தமிழ் படதிரையுலகினர் இடையில்  பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் பாலா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். "வர்மா" படத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவித்த தவறான தகவலால் இந்த விளக்கத்தை தர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளேன் மேலும் படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டும் சுயமாகவே எடுத்த முடிவு.

நடிகர் விக்ரம் மகனின் எதிர்காலத்தை  கருதி மேலும் நான் எதுவும் பேச விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.