AD

‘என்னுடைய தோழியே என் காதலனுடன் சேர்ந்து கொண்டு என்னை ஏமாற்றினாள்’ - ஐஸ்வர்யா ராஜேஷ்


சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமான படம் “கனா”. சத்யராஜ், ஜஸ்வர்யா ராஜேஷ், இளவரசு, ரமா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல்
ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கனா படத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷை தேடி நல்ல நல்ல வேடங்களும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளும் வருகின்றன. இந்த நிலையில் அவரது காதலர் பற்றி அவரிடம் கேட்ட கேள்விக்கு  அவர் இவ்வாறு
பதில் அளித்துள்ளார்.

‘நான் இப்போது சிங்கிளாக தான் இருக்கிறேன். காதலை பொறுத்தவரை நான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவள். என் முதல் காதல் தோல்வி 12ஆம் வகுப்பில் தொடங்கியது. என்னுடைய தோழியே என் காதலனுடன் சேர்ந்து
கொண்டு என்னை ஏமாற்றினாள். சில ஆண்டுகள் கழித்து இன்னொரு ரிலே‌ஷன்ஷிப்பில் இருந்தேன். ஆனால் பிரிய வேண்டியதாகி விட்டது. நான் மிகவும் உணர்வுபூர்வமானவள்.

ஒருவருடன் காதலில் இருக்கும்போது அந்த காதல் முடிந்துவிட கூடாது என்று நினைப்பேன். ஆனால் என் துரதிர்ஷ்டம். என்னுடைய காதல் எல்லாமே தோல்வியில் தான் முடிந்தது. எனவே இப்போது வேலையில் மட்டுமே கவனம்
செலுத்தி வருகிறேன். ஒரு நடிகையாகஇருந்துகொண்டு காதலிப்பது சிரமம். ஆனால் காதல் மிக அவசியமான ஒன்று. சில காதல் ஜோடிகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். நான் எனக்கான காதலருக்காக
காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.