AD

நடிகை காவேரியின் தற்பொழுது நிலைமை!!

வைகாசி பொறந்தாச்சு எனும் படத்தில் 1990ஆம் ஆண்டு அறிமுகமான பிரசாந்துக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை காவேரி. போக்கிரி தம்பி, சேதுபதி ஐ.பி.எஸ் மற்றும் நல்லதே நடக்கும் ஆகிய படங்களிலும்  நடித்துள்ளார். அதன் பிறகு அவர் எதிர்பார்த்த அளவிற்கு சினிமா வாய்ப்புகள் எதுவும் வராததால் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். காவேரி,மீரா, வம்சம் ஆகிய தொடர்களில் நடித்து வந்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டு ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டில் ஆனார். அதன் பிறகு இவர் எந்த ஒரு சீரியலிலும் நடிக்க வில்லை. சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடரில் மீண்டும் நடிக்க வந்தார் நடிகை காவேரி. இந்த தொடரில் தனம் என்னும் வெகுளித்தனமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

மெட்டி ஒலி தொடரில் நடித்தவர்கள் Re-யூனியனுக்கு வந்தபோது காவேரியை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அளவிற்கு உடல் எடையை குறைத்துள்ளார். சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
#Kaveri #Serial actresses #metti oli #tamilcinemaking